districts

img

இல்லம் தேடி கல்வித் திட்ட மாணவர்களுக்கு கலை விழா

புதுக்கோட்டை, அக்.3 - காலாண்டு விடு முறையை முன்னிட்டு புதுக் கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தன் னார்வலர்களால் இல்லம் தேடி கல்வித்திட்ட மாண வர்களுக்கு கலைவிழா நடைபெற்று வருகிறது.  பொது முடக்க காலங் களில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைத்திடும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம்  செயல்படுத்தப்பட்டு வரு கிறது.  இந்நிலையில், புதுக் கோட்டை ஒன்றியம் கட்டி யவயல், அடப்பகார சத்திரம், எல்லைப்பட்டி ஆகிய குடியிருப்பு பகுதி களில் பணிபுரிந்து வரும் தன் னார்வலர்கள் அனைவரும் குழந்தைகளின் இயல்பு களைப் புரிந்து கொண்டு அவர்களின் தனித்திறனை கொண்டாடி வருகின்றனர். தற்போது காலாண்டு விடுமுறையை முன்னிட்டு மாணவர்களுக்கு உரு ளைக்கிழங்கு பொருக்கு தல், சாக்கு ஓட்டம், ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டி கள் நடத்தப்பட்டன. விழா வினை காண வந்த பெற்றோர் களுக்கும் மியூசிக்கல் சேர் போட்டி நடத்தப்பட்டன.  விளையாட்டுப் போட்டி யினை ஒருங்கிணைந்த மாவட்ட உதவி திட்ட அலு வலர் எஸ்.தங்கமணி தொ டங்கி வைத்தார். இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஆலோசகர் அ.மணவாளன், இல்லம் தேடி கல்வி திட்ட  மாவட்ட ஆசிரிய ஒருங்கி ணைப்பாளர் முனியசாமி உள்ளிட்டோர் பேசினர்.

;