புதுக்கோட்டை, ஏப்.17 - புதுக்கோட்டை அருகே எய்டு இந்தியா மற்றும் சாகி டெக் நிறுவனம் சார்பில் ஏழை களுக்கு கட்டிக் கொடுக்கப் பட்ட 5 வீடுகள் சனிக்கிழமை பயனாளிகளிடம் ஒப்படைக்கப் பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத் தொகு திக்கு உட்பட்ட அன்னவா சல் ஒன்றியம் வெள்ளனூர் ஊராட்சியில் உள்ளது காமரா ஜர்புரம் நகர். இங்குள்ள 5 ஏழைக் குடும்பங்களுக்கு எய்டு இந்தியா மற்றும் சாகி டெக் நிறுவனம் சார்பில் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட் டன. கட்டி முடிக்கப்பட்ட புதிய வீடுகளை கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பே ரவை உறுப்பினர் எம்.சின்ன துரை சனிக்கிழமை திறந்து வைத்தார். எய்டு இந்திய மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ராஜா வரவேற்றார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் கே.சண்முகம், மாதர் சங்க மாவட்டச் செய லாளர் டி.சலோமி, ஊராட்சி மன்றத் தலைவர் வேலுச் சாமி, ஒன்றியக் கவுன்சிலர் கண்ணதாசன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, விசிக ஒன்றி யச் செயலாளர் பாண்டியன், ஆத்மா கமிட்டி உறுப்பினர் ரகுபதி உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.