புதுக்கோட்டை, அக்.12 - அரசின் திட்டங்கள் ஏழை, எளிய மக்க ளுக்குச் சென்றடையும் வகையில் அதிகாரிகள் முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும் என்றார் திருச்சிராப்பள்ளி தொகுதி மக்க ளவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர். மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் திருச் சிராப்பள்ளி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தலைமை யில் புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் செவ் வாய்க்கிழமை மாவட்ட வளர்ச்சி ஒருங்கி ணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு அவர் தெரி விக்கையில், பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம், மண்வள அட்டை இயக்கம், பிர தான் மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், மின்னணு தேசிய வேளாண் சந்தை, ஊரக மின்மயமாக்கல் திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம், தேசிய சுகாதார இயக்கம், பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா, மதிய உணவுத் திட்டம், ஜல் ஜீவன் மிசன், தூய்மை பாரதத் திட்டம் உள்ளிட்ட 44 திட்டப் பணிகள் விபரங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விபரம், செலவு செய்யப்பட்ட நிதி விபரம், பணி முன்னேற்றம் மற்றும் நடைபெற்று வரும் பணிகள், முடி வுற்றப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. அரசின் திட்டங்கள் ஏழை, எளிய பொதுமக்களை சென்றடையும் வகை யில் முன்னுரிமை அளித்து செயல்படுத்துவ துடன், அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும் என்றார். கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலை வகித்தார். மாநிலங் களவை உறுப்பினர் மற்றும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் துணைத் தலைவர் எம்.எம்.அப்துல்லா, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.