பொன்னமராவதி, மே 12- பொன்னமராவதி ஒன்றியம் கண்டியாநத்தம் ஊராட்சி கேசராபட்டியில் பொன்னமராவதி துர்கா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. கேசராபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் செல்வி முருகேசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ரோஜா பானு தொடங்கிவைத்தார். முகாமில் பொன்னமராவதி துர்கா மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற பரிசோதனை மேற்கொண்டு மருந்து, மாத்திரை வழங்கினர்.