புதுக்கோட்டை, மே 10 - பட்டுக்கூட்டிற்கு உரிய கொள் முதல் விலை கொடுக்காததால் பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் திங்கள்கிழமை அதி காரிகளுடன் வாக்குவாதத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அரையப்பட்டி, வடகாடு, அரிமளம், வேங்கிடகுளம், சூரன்விடுதி, அணவயல், காயக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் பணியில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடு பட்டு வருகின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகள் பட்டுக்கூடு அங்காடி மற்றும் பட்டு நூற்பு மையத்திற்கு கொண்டு வந்து கொள்முதலுக்கு கொடுப்பது வழக்கம். இந்நிலையில், திங்கள் கிழமை விவசாயிகள் உற்பத்தி செய்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்பி லான பட்டுக்கூடுகளை புதுக்கோட் டையில் உள்ள அரசு பட்டுக்கூடு அங்காடி மற்றும் பட்டு நூற்பு மையத்திற்கு கொண்டு வந்துள்ள னர். ஒரு கிலோ கூடு ரூ.850 வரை விற்கப்படும் சூழலில், 300 முதல் 350 ரூபாய் வரை மட்டுமே கொள் முதல் செய்யப்படும் என அதி காரிகள் தெரிவித்ததால் விவ சாயிகள் அதிர்ச்சியடைந்தனர். பல்லாயிரக்கணக்கில் செலவு செய்து பட்டுக்கூடு உற்பத்தி செய்து வரும் நிலையில், உரிய விலையை நிர்ணயம் செய்யாமல் மிகவும் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வது எந்த வகையிலும் நியா யம் ஆகாது. எனவே, நாங்கள் உற்பத்தி செய்த பட்டுக்கூடுகளை இந்த அலுவலகத்தில் குவித்து வைத்துள்ளோம். இதை குறிப்பிட்ட நாளுக்குள் கொள்முதலுக்கு எடுக்க வில்லையென்றால் பாடுபட்டு உற்பத்தி செய்த அனைத்து பட்டுக் கூடுகளும் பூச்சி வைத்து பயன் படுத்த முடியாமல் போய்விடும். எனவே, தமிழக அரசு தலை யிட்டு உரிய கொள்முதல் விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுத்து தங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டுமென கூறி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனைத் தொடர்ந்து உரிய விலையை நிர்ணயம் செய்ய அதிகாரிகள் முன்வந்ததால் போராட்டம் விலக்கிக்கொள்ளப் பட்டது.