districts

img

வெள்ளத்திலிருந்து மீட்பு: ஒத்திகை நிகழ்ச்சி

அறந்தாங்கி, செப்.2 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு முகமை அறிவுறுத்தலின்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவை யான நிவாரணங்கள் வழங்குவது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.  அறந்தாங்கி நகரில் அருகன்குளம் காந்தி பூங்காவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, முதலுதவி, மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வது, தற்காலிக நிவாரண முகாம்கள் ஏற்படுத்துவது, உணவு வழங்குவது உள்ளிட்ட நேரலை  மீட்பு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட வழங்கல் துறை அலுவலர் ஆர்.கணேசன் தலைமையில் நடை பெற்றது. இதில், அறந்தாங்கி தீயணைப்பு நிலைய அலுவலர், பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த முதல் நிலை மீட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கரூர்
கரூர் திருமாநிலையூர் அமராவதி ஆற்றுப் பகுதி யில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் வெள்ள பேரிடர் காலங்களில் மேற் கொள்ள வேண்டிய மீட்புப் பணிகள் தொடர்பான மாதிரி ஒத்திகை நடைபெற்றது.