districts

அப்பாவிகள் மீது பொய் வழக்குப் போடுவதா? ஜூலை 12 புதுக்கோட்டை எஸ்.பி. அலுவலகம் முற்றுகை இடதுசாரிக் கட்சிகள், விசிக அறிவிப்பு

புதுக்கோட்டை, ஜூலை 2 - குற்றவாளிகளை தப்பவிட்டு, பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மீது பொய் வழக்குப் போடும் காவல் துறையை கண்டித்து ஜூலை 12 அன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட் டம் நடத்துவது என இடதுசாரிக் கட்சிகள், விசிக அறிவித்துள்ளது. இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதுக் கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு விசிக மாவட்டச் செய லாளர் செப.பாவாணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் திருஞானம், சிபிஐ(எம்எல்) கட்சியின் சார்பில் பாஸ்கர் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினரின் செயல் பாடுகள் நாளுக்கு நாள் மோச மடைந்து வருகிறது. பாதிக்கப்பட்டு காவல் நிலையங்களை நோக்கி வரும் சாமானிய ஏழை, எளிய,  ஒடுக்கப்பட்ட மக்களை தொடர்ந்து  உதாசீனப்படுத்தி வருகிறது. இது குறித்து, காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் கவ னத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் அலட்சியமே பதிலாக தரப்படு கிறது. சமீபத்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கயவன் மீது வடகாடு காவல்நிலையத்தில் புகார் கொடுக் கப்பட்டது. பாதிக்கப்பட்டது பட்டிய லின வகுப்பைச் சேர்ந்த மாணவி என்பதாலும், குற்றவாளி உயர் வகுப்பு என்று சொல்லிக் கொள்ளும்  நபர் என்பதாலும் காவல்துறை உடன டியாக நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், ஊக்கமடைந்த அந்த கய வன் தனது அடியாட்களுடன் பாதிக்கப் பட்ட மாணவியின் குடியிருப்பு களுக்குள் புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினான். இதில் படு காயமடைந்த 6 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இடதுசாரிக் கட்சிகள், விசிகவின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு பிறகுதான் குற்றவாளிகள் மீது  வழக்குப் பதிவு செய்து சிலர் கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில் தாக்குதலில் தனது மூன்று விரல் களையும் இழந்த பட்டியலின இளைஞரை மருத்துவமனையில் இருந்து கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்ய வைத்து காவல்துறை தற்பொ ழுது கைது செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  காவல்துறையில் சாதி ஆதிக்கத் திற்கு துணைபோகும் கருப்பு ஆடு கள் நிறைந்து இருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அல்லது அதிகார வர்க்கத்தின் அழுத்தம் காரணமாக காவல்துறை தனது கடமையில் இருந்து தவறி விட்டதோ என்ற எண்ணத்தை ஏற்ப டுத்துகிறது. எது எப்படி இருந்தா லும் காவல்துறையினரின் இத்தகைய அராஜகப் போக்கு மிகவும் கண்டிக் கத்தக்கது. வடகாடு காவல்துறை அதிகாரி கள் மற்றும் ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆதிக்க  வர்க்கத்தினரின் அடியாளாக மாறி விட்டனர் என்கிற குற்றச்சாட்டை  மாவட்ட காவல் கண்காணிப்பாள ரின் கவனத்திற்கு கொண்டு சென்றும், நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, இத்தகைய செயல்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஒப்புத லும் இருக்கிறதோ என சந்தேகத்தை  ஏற்படுத்துகிறது.

காவல்துறையினரின் இத்தகைய  அராஜகப் போக்கை கண்டித்தும், சாதிய ஆதிக்கத்திற்கு துணைபோ கும் அதிகாரிகள் மீது தமிழக அரசு  உரிய நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியும் ஜூலை 12 அன்று புதுக் கோட்டை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கா னோரை பங்கேற்க செய்வது எனவும், மாவட்டம் முழுவதும் இது குறித்து தீவிரப் பிரச்சாரம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் விசிக மாநில துணைச்  செயலாளர் தெ.கலைமுரசு, சிபிஎம்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் த. அன்பழகன், ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலை வர் டி.சலோமி, செயலாளர் சி.ஜீவா னந்தம், மாதர் சங்க மாவட்டப் பொரு ளாளர் எஸ்.பாண்டிச்செல்வி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

;