districts

img

‘முன்னுதாரணமான வழிகாட்டி தோழர் க.செல்வராஜ்’ படத்திறப்பு நிகழ்வில் ஐ.வி.நாகராஜன் பேச்சு

புதுக்கோட்டை, ஜூன் 25 - ஸ்தாபன செயல்பாடுகளில் முன்னுதாரணமான வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் தோழர் க.செல்வராஜ் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தில் மாவட்டச் செயலாளராக, இந்திய  தொழிற்சங்க மையத்தில் (சிஐடியு)  மாவட்டத் தலைவராக, செயலாள ராக, மாநிலக்குழு உறுப்பினராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தாலுகா செயலாளராக, மாவட்டக் குழு உறுப்பினராக, மாவட்ட செயற் குழு உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றிய தோழர் க.செல்வராஜ் கடந்த 8.4.2022 அன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

ரூ.1 லட்சம் குடும்பப் பாதுகாப்பு நிதி
தோழர் க.செல்வராஜின் படத் திறப்பு புதுக்கோட்டை கட்சி அலுவ லகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார்.  தோழரின் படத்தை திறந்து வைத்து,  கட்சி மற்றும் சிஐடியு சார்பில் வழங்கப் பட்ட ரூ.1 லட்ச ரூபாய் நிதியை மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் குடும்பத்தினருக்கு வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், “தனது இறுதிகாலம் வரை புதுக் கோட்டை மாவட்ட உழைப்பாளி  மக்களுக்காக அரும்பணியாற்றிவர் தோழர் க.செல்வராஜ். எந்தவித விருப்பு, வெறுப்புக்கும் இடமளிக்கா மல் கட்சியின் நிலைப்பாட்டிலிருந்து, கமிட்டி கூட்டங்களில் சரியாக விவாதிப் பதில் முன்னுதாரணமான தோழராக செல்வராஜ் திகழ்ந்தார்.  கடந்த சட்டமன்றத் தேர்தலில் கந்தர்வகோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக எம்.சின்னத்துரை போட்டியிட்டார். அப்போது கந்தர்வ கோட்டை தொகுதிக்குழு செயலாள ராக இருந்து திறம்படப் பணியாற்றி யவர். அந்நேரத்தில் கட்சியின் கந்தர்வகோட்டை ஒன்றியக் குழு வுக்கும் தோழர் செல்வராஜ் பொறுப் பாளராக இருந்தார்.

கந்தர்வ கோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றதில் தோழர் க.செல்வராஜின் பங்கு முக்கியமானது. இறுதி நாள் வரை உழைப்பாளி மக்களுக்காக அரும் பணியாற்றிய தோழர் க.செல்வ ராஜின் தியாகம் இந்த மண்ணில் என்றென்றும் நிலைத்திருக்கும்” என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், ஏ.ஸ்ரீதர்,  கே.சண்முகம், சி.அன்புமணவாளன், ஜி.நாகராஜன், த.அன்பழகன், சு. மதியழகன், மூத்த தோழர் எம்.ஜியா வுதீன், கவிஞர் நா.முத்துநிலவன், அறிவியல் இயக்கம் சார்பில் அ.மண வாளன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் கே. முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ். பாலசுப்பிரமணியன், வாலிபர் சங்க  மாவட்டச் செயலாளர் துரை.நாரா யணன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர், தமுஎகச மாவட்டப் பொருளாளர் கி. ஜெயபாலன் மற்றும் கட்சியின் ஒன்றி யச் செயலாளர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் புகழஞ்சலி உரை நிகழ்த்தினர்.

;