districts

இறையூர் சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை சரியானது! அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை, ஜன.6-  இறையூர் கிராமத்தில் தீண்டாமையை கடைப்பிடித்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம்  எடுத்துள்ள நடவடிக்கை சரியானது என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அமைச்சர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், ‘‘புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் வழி காட்டு நெறிமுறைகள் முறையாக கடை பிடிக்கப்படவில்லை என மாவட்ட நிர்வாகம்  நிறுத்தி வைத்திருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு உச்ச நிதிமன்றத்தில் இப்போ தும் நிலுவையில் உள்ளது. இறுதித்தீர்ப்பு இன்னும் வரவில்லை.  வேங்கைவயல் பட்டியலின மக்களின் குடியிருப்புக்கு தண்ணீர் வழங்கும் தொட்டி யில் மனிதக் கழிவைக் கலந்த விவகாரத்தில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து மக்கள் எழுப்பிய புகார்கள் மீது  ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். சட்டப்படி யாரையும் இழிவாக நடத்தக் கூடாது. இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை சரியானது’’ என்றார்.