districts

img

ஆதரவற்ற முதியோருக்கு புத்தாடை, இனிப்பு வழங்கல்

அறந்தாங்கி, அக்.22 - புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கியை அடுத்த குரும்பூர் ஒத்தக் கடை சத்திரப்பட்டியில் செயல்பட்டு கொண்டிருக்கும் ‘புதிய நமது இல்லம்’ அறக்கட்டளை மூத்த குடி மக்களுக்கான மறுவாழ்வு இல்லத் தில் தீபாவளியை முன்னிட்டு ஆதர வற்ற முதியோருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.  அறக்கட்டளையின் நிறுவனர் சந்திரசேகரால், பராமரிக்கப்பட்டு வரும் ஆதரவற்ற முதியோர்கள் 65  பேருக்கும், அப்பகுதியில் ஏழ்மை நிலையில் உள்ள 35 பேருக்கும், ஈரோடு ஜீவிதம் பவுண்டேசன் சார் பாக, நிறுவனர் செல்வி கி.மனிஷா மற்றும் அவரது குழுவினர் உடைகள்,  மளிகை பொருட்கள் மற்றும் இனிப்பு களை வழங்கினர்.  இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித் தார். மேலும், கட்சி உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.