அறந்தாங்கி, ஏப்.10- புதுக்கோட்டை மாவட்டம் குரும்பூர், சத்திரப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புதிய நமது இல்லம் அறக்கட்டளையில், அறந்தாங்கி, திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு சார்பில் இலவச தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தொடங்கி வைத்தார். நிகழ்விற்கு திசைகள் அமைப்பின் பொருளாளர் முகமது முபாரக் தலைமை வகித்தார். திசைகள் அமைப் பின் ஒருங்கிணைப்பாளர்கள் த.அண்ணா துரை.மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோல் நோய் சிறப்பு மருத்துவர் ச.தெட்சிணா மூர்த்தி கலந்து கொண்டு 90 முதியவர்களுக்கு சிகிச்சை அளித்தார். மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.