புதுக்கோட்டை, டிச.7 -
புதுக்கோட்டையில் ரயில் நிலையம் அருகில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ஆர்எம்எஸ் தபால் பிரிவு அலுவலகத்தை மூடுவதைக் கண்டித்து புதுக்கோட்டையில் சிஐடியு, மாதர், வாலிபர், மாணவர் அமைப்புகளின் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜனார்த்தனன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கி.ஜெயபாலன், நகரச் செயலாளர் புதுகை எஸ்.பாண்டியன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வசந்தகுமார், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் சி.மாரிக்கண்ணு, க.ரெத்தினவேல், மாதர் சங்க நகரச் செயலாளர் முத்துமாரி மற்றும் பாபு ராஜேந்திரன், எம்.ஏ.ரகுமான, வழக்கறிஞர் ஜெகன், கார்த்திக் உள்ளிட்டோர் பேசினர்.