districts

சுகாதாரமான குடிநீர் வழங்க கோரிக்கை

பொன்னமராவதி, ஜூன் 18 - பொன்னமராவதியில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) பேரவை கூட்டம் மணிவேல் தலைமை யில் நடைபெற்றது. பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்  சங்கத்தின் ஆண்டு பேரவைக்கு மணிவேல் தலைமை வகித்தார். அரசு போக்குவரத்து பணிமனையில் தொழிலாளர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். கூடுதலாக ஓய்வறை,  கழிப்பறை அமைத்து தர வேண்டும் என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய தலைவராக எஸ்.சரவணன், செயலா ளராக எஸ்.பாலமுருகன், பொருளாளராக சி.ரவிச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டனர்.

;