புதுக்கோட்டை, டிச.10- புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை அடுத்த பரம்பூர் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர்கள் பி.நடராஜன், வி.மணி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.சண்மும் உள்ளிட்டோர் பேசினர். பரம்பூர் பள்ளத்திக்குளம் பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டும். மழைநீருடன் கழிவுநீர் கலக்காதவாறு வாய்க்கால் அமைக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதாரத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.