புதுக்கோட்டை, ஏப்.15 - தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு அவரது 137-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமையன்று மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை யில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கந்தர்வகோட்டையில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம். சின்னதுரை தலைமையில் மரியாதை செலுத்தப் பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் நா.முத்து நிலவன் தலைமையில், மாவட்டச் செயலாளர் சு.மதிய ழகன், துணைத் தலைவர் ராசி.பன்னீர்செல்வம், நகரக்கிளை செயலாளர் சு.பீர்முகமது, அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் புதுக்கோட்டையில் உள்ள அம்பேத்க ரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரியலூர்
அரியலூர் அண்ணா சிலை அருகில் உள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு சிபிஎம் மாவட்ட செய லாளர் எம்.இளங்கோவன் தலைமையில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருமானூரில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.கிருஷ்ணன் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர்.புனிதன், சிபிஐ ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தனர். ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு சிபிஎம் கைத்தறி நெசவாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ். என்.துரைராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். முன்னதாக மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்க இயலாது என உறுதிமொழி ஏற்றனர். முடிவில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மாவதி நன்றி கூறினார். தா.பழூர் கடைவீதி பேருந்து நிறுத்தம் அருகே அம்பேத்கரின் உருவச்சிலைக்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.மகாராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒன்றிய செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மன்னார்குடி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு சார்பில் நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன் மன்னார்குடி அம்பேத்கர் சதுக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நகர குழு, கிளை உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். அம்பேத்கர் சிலைக்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரகுபதி மாலை அணிவித்தார். தமுஎகச கிளைத் தலைவர் பாஸ்கர் மற்றும் செயலாளர் தியாக சிவசுப்பிரமணியன் மாலை அணிவித்தனர்.
நாகப்பட்டினம்
நாகை ஒன்றியம் குறிச்சி ஊராட்சி மற்றும் வேதா ரண்யம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் நாகை மாவட்ட குழுவின் சார்பில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து புரட்சி வணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் கவிஞர் ஆவராணி ஆனந்தன், மாவட்ட செயலாளர் ஆதி.உதயகுமார், மாவட்ட பொருளாளர் க. இரமேஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செய லாளர் ப.சுபாஷ் சந்திரபோஸ், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அரசு போக்குவரத்துக் கழக பணி மனை முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், ஏ.வி.சிங்காரவேலன், ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி மற்றும் மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.
பொன்னமராவதி
பொன்னமராவதியில் அண்ணல் அம்பேத்கரின் 131 வது பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதி ஏற்பு விழா நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் நகர செயலாளர் மலை.தேவேந்திரன் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவ-மாணவி களுக்கு நோட்டுப் புத்தகங்கள், எழுதுகோல்கள் வழங்கப் பட்டன.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மறியல் பகுதியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், மாவட்டத் தலைவர் கே.அபி மன்னன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், பி.செந்தில்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அரசு ஊழியர் சங்கம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தஞ்சாவூர் வடக்கு வட்டக் கிளை சார்பில், அம்பேத்கர் உருவச் சிலைக்கு, கிளைத் தலைவர் இளங்கோவன் தலைமையில், மாநிலச் செயலாளர் எஸ்.கோதண்டபாணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒரத்தநாட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றியச் செயலாளர் கு.பாஸ்கர், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.