புதுக்கோட்டை, ஏப்.17 - கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர்களுக் கான சிறப்புப் பேரவைக் கூட்டம் கந்தர்வகோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. பேரவைக்கு சட்டமன்ற தொகுதிக் குழு ஒருங்கிணைப் பாளர் ஏ.ராமையன் தலைமை வகித்தார். பேரவையில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்ன துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், த.அன்பழகன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எஸ்.பொன்னுச்சாமி, டி.சலோமி உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சண்மும், சு.மதியழகன், ஒன்றிய செயலாளர்கள் எம்.வீரமுத்து, எம்.ஆர். சுப்பையா, எஸ்.கலைச்செல்வன், ஆர்.காமராஜ் உட்பட 200 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.