districts

img

சொத்துவரி உயர்வைக் கண்டித்து சிபிஎம் முற்றுகைப் போராட்டம்

புதுக்கோட்டை, மார்ச்.1-  புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட வீடு, வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் உள் ளிட்ட சொத்து வரிகளை நகராட்சி நிர்வாகம் வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியுள்ளது. கடந்த ஆண்டைவிட சுமார் 250 வரை வரிகள்  உயர்த்தப்பட்டுள்ளதாகவும், நகராட்சி நிர்வாகம் முறையாக வசூல் செய்வதில்லை எனவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புதுக்கோட்டை நகராட்சியில் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வைக் கண்டித்தும், வரி உயர்வை திரும்பப் பெறக் கோரியும்மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை நக ராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடை பெற்றது.  போராட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலா ளர் ஆர்.சோலையப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.நாக ராஜன், நகரக்குழு உறுப்பினர்கள் சி.அடைக் கலசாமி, கி.ஜெயபாலன், எம்.ஏ.ரகுமான், எஸ். பாண்டியன், கணேஷ், நிரஞ்சானதேவி, வாலி பர் சங்க மாவட்டத் தலைவர் மகாதீர் மற்றும் வசந்தகுமார், மகாலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தைத் தொடர்ந்து நகராட்சி பொறி யாளர் சேகரன், கணேஷ்நகர் காவல் ஆய்வா ளர் அப்துல்ரகுமான் ஆகியோர் கட்சி நிர்வாகி களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  பேச்சுவரத்தையில், உயர்த்தப்பட்டுள்ள வரிவிதிப்பை பரிசீலனை செய்வதாகவும் அதிக மாக வரி விதிக்கப்பட்ட பயனாளிகள் புகார் மனு அளித்தால் பரிசீலனை செய்வதாகவும் அதிகாரி கள் உறுயளித்தனர். வரிவிதிப்புக்கு எதிரான  பொதுமக்களின் கோரிக்கையை மாநில அர சுக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக் கப்பட்டது.