districts

img

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தர்ணா போராட்டம்

புதுக்கோட்டை, செப்.29-  ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அரசுப் போக்குவரத்து தொழிலா ளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை யில் வியாழனன்று அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அரசுப் போக்குவரத்துத் தொழிலா ளர் சங்கத்தின் (சிஐடியு) மண்டலத் தலைவர் கே.கார்த்தி கேயன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஆர்.மணிமாறன், பொருளாளர் எம்.முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் எஸ்.சாமிஅய்யா, எஸ்.செந்தில்நாதன், கே. அண்ணாத்துரை உள்ளிட்டோர் பேசினர். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், ஓய்வுபெற்ற நல அமைப்பு மாவட்டத் தலைவர் பி.லோகநாதன், பொதுச்  செயலாளர் எஸ்.இளங்கோவன், ஜே.எஸ்.ஆர்.வின்செண்ட உள்ளிட்டோர் ஆதரித்து பேசினர். போராட்டத்தில், ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே பணப்பலன்களை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அக விலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். விருப்ப ஓய்வில் சென்றவர்கள் மற்றும் பணியில் இருக்கும் போது மரணமடைந்த தொழிலாளர்களுக்கு 2019-ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். 30 நாட்களுக்கு முன்பாக சட்டப்படி வழங்க வேண்டிய தீபாவளி முன்பணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.  தொழிற்சங்கங்களை அழைத்து போனஸ் பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உச்சவரம்பின்றி 20 விழுக்காடு போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

;