districts

img

கம்யூனிஸ்டுகள் ஊடகங்களிலும் வலுவான அரசியலை எடுத்துச் செல்ல வேண்டும்

புதுக்கோட்டை, பிப்.20 - கம்யூனிஸ்டுகள் ஊடகங்களிலும் தங்களது வலுவான அரசியலை எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் திரைக்கலைஞர் மதன் தட்சிணா மூர்த்தி. புதுக்கோட்டையில் நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இரத்த தானக் கழக மாநில மாநாட்டில் அவர் பேசியதாவது:

வாலிபர் சங்கத்தினரை போல களத்தில் நின்று போராடுகிற வலுவான அமைப்பு வேறு எதுவும் கிடையாது. இந்த மண்ணில் கம்யூனிஸ்டுகளின் தியாகம் அளப்பரியது. சாதாரண ஏழை, எளிய மக்களோடு நெருக்க மாக நின்று பணியாற்றுவது கம்யூ னிஸ்டுகள் மட்டுமே. மிகவும் உண்மையாக இருப்பது கூட எளிய மக்களிடம் சென்று சேருவதில் பிரச்சனையாக உள்ளது. திரைத்துறையில் உண்மையைப் போல போலியாகவும் வந்தவர்கள் மக்கள் மனதை எளிதாக வென்றுவிடுகின்றனர்.

ஊடகத்தின் வாயிலாக நீங்கள் மக்கள் மத்தியில் சென்றுசேர முயற்சிக்க வேண்டும். சினிமா மட்டு மல்ல. பல்வேறு சமூக ஊடகங்களின் வாயிலாகவும் உங்களின் செயல்பாடு கள் சென்றடையும் போதுதான் இங்கே  மாற்றத்தைக் கொண்டுவர முடியும். கடந்த சில வருடங்களாக நான் தீக்கதிர் நாளிதழை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

முதல் பக்கத்தில் இருந்து கடைசிப் பக்கம் வரை உலக அர சியல் முதல் உள்ளூர் அரசியல் வரை  எதையும் நிராகரிக்க முடியாத அள வுக்கு செய்திகள் வருகின்றன. ஆனால்,  அது பல இடங்களில் விற்பனைக்குக் கிடைப்பதில்லை. தீக்கதிர் வாசகர் களின் எண்ணிக்கையை இன்னும் பல  மடங்கு உயர்த்த வேண்டும்.  திரைத்துறையில் கம்யூனிச சித்தாந்தங்களைக் கொண்டு செல்வ தற்கும், உங்களோடு இணைந்து பணி யாற்றுவதற்கும் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.