districts

வாரிய ஆணை எண்.2-ஐ ரத்து செய்க! மின்வாரிய ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, நவ.9- தனியாருக்கு தாரை வார்க்கும் வாரிய ஆணை  எண்.2-ஐ ரத்து செய்ய வேண் டும். முடக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்  டும் அமல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்  தில் உள்ள குறைகளை களைந் திட வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு  பெற்ற மின் ஊழியர் நலச்  சங்கத்தின் சார்பில் புதுக்  கோட்டையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  புதுக்கோட்டை மின் வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஓய்வூதியர் நல சங்  கத்தின் கிளை துணைத் தலை வர் சே.கருப்பையா தலைமை வகித்தார். மத்திய அமைப் பின் திட்ட பொருளாளர் ஏ. ஆறுமுகம், சிஐடியு மாவட்  டத் தலைவர் கே.முகமது அலி ஜின்னா, சங்கத்தின் கிளை செயலாளர் ஆவுடை முத்து உள்ளிட்டோர் பேசி னர்.