districts

img

மாட்டுவண்டி எல்லை பந்தயம்

அறந்தாங்கி, செப்.4 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாண்டி பத்திரம் கிராமத்தில் முத்துமாரி அம்மன் கோவிலின் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரிவள்ளல் இளைஞர் மன்றத்தினரால் நடத்தப்பட்ட 16 ஆம் ஆண்டு மாட்டு வண்டி எல்லை பந்த யம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, இராமநாத புரம், தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங் களில் இருந்து, பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு என  மூன்று பிரிவுகளாக 70-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையா ளருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

;