தமிழ்நாட்டு உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி திங்களன்று புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு வருவதாக இருந்தது. இதையடுத்து ஆளுநர் வருகையை கண்டித்து, புதுக்கோட்டையில் அன்னவாசல் பிரிவு ரோட்டில் கட்டியாவயல் என்ற இடத்தில், கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நேரமின்மை காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு ஆளுநர் வருவது ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.