districts

img

உடையனேரி மக்களுக்கு அடிப்படை வசதிகள் எம்.சின்னதுரை எம்எல்ஏ முன்னிலையில் அதிகாரிகள் உறுதி

புதுக்கோட்டை, மார்ச் 26-  புதுக்கோட்டையை அடுத்த உடைய னேரி காலனியில் வசிக்கும் மக்களுக்கு மனைப்பட்டா, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தினரின் தலைமையில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பின ரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை முன்னி லையில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, மின்வாரிய உதவிப் பொறியாளர் கவியரசன் உள்ளிட்டோர் உடையநேரி கிராமத்திற்கு நேரில் சென்று சனிக்கிழமை ஆய்வு செய்தனர் அப்போது, உடனடியாக குடிநீர் வழங்கவும், அடுத்த பத்து தினங்களுக்குள் தெருவிளக்கு மற்றும் தற்காலிக வீட்டு ரசீது வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதியளித்தார். சட்டமன்ற உறுப்பினருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் சி.அன்புமணவாளன், துரை.நாராயணன், மாவட்டக்குழு உறுப்பினர் டி.சலோமி, ஒன்றியச் செயலாளர் டி.லெட்சாதிபதி ஆகியோர் வந்திருந்தனர்.

;