districts

img

எழுத்தாளர் அண்டனூர் சுராவுக்கு விருது

புதுக்கோட்டை, டிச.19- புதுக்கோட்டை மாவட்  டத்தைச் சேர்ந்த எழுத்தா ளர் அண்டனூர் சுராவுக்கு ‘எழுத்து’ இலக்கிய அமைப்  பின் சார்பில் திருமதி.சௌந்  தரா கைலாசம் இலக்கிய  விருது அறிவிக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து ‘எழுத்து’ தமிழிலக்கிய அமைப்பின் தலைவர் ப.சிதம்பரம் தெரி வித்துள்ளதாவது: ‘எழுத்து’ தமிழிலக்கிய அமைப்பு ‘திருமதி.சௌந்  தரா கைலாசம் இலக்கியப்  பரிசு’ எனும் பெயரில் ஆண்டு தோறும் நாவல் போட்டி களை நடத்தி தேர்வுபெறும் எழுத்தாளருக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கி வந்தது. இந்த ஆண்டிலிருந்து பரி சுத் தொகை ரூபாய் இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டுள் ளது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான நாவல் போட்  டிக்கு வந்த நாவல்களை நடு வர் குழு பரிசீலித்து பரிசுக்கு ரிய நாவலை அறங்காவலர் குழுவின் ஒப்புதலுக்கு அளித்தது. அதன்படி 2021  ஆம் ஆண்டிற்கான திருமதி. சௌந்தரா கைலாசம் இலக்  கிய விருதும், அதற்கான ரூபாய் இரண்டு லட்சம் பரி சும் எழுத்தாளர் அண்டனூர் சுரா எழுதிய ‘அன்னமழகி’ என்கிற நாவலுக்கு வழங்கப்  பட உள்ளது. விருது வழங்  கும் விழா 31.12.2022 சனிக்  கிழமை மாலை 5 மணியள வில் சென்னை தியாகராயர் நகர் சர்.பி.டி.தியாகராயர் அரங்கில் நடைபெறுகிறது.  இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார். விருது பெறும் எழுத்தா ளர் அண்டனூர் சுரா சிறு கதை, குறுநாவல், நாவல்  என முற்போக்குப் படைப்பி லக்கியங்களை தொடர்ந்து எழுதி வருபவர். மழைக்குப் பிறகான பொழுது, திற, ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை, பிராண நிறக்  கனவு, எண் வலிச் சாலை,  எத்திசைச் செலினும், தடுக்கை என ஏழு சிறுகதைத் தொகுப்புகளும், முத்தன் பள்ளம், அப்பல்லோ, தீவாந்  தரம் ஆகிய நாவல்களும், கொங்கை, முதல் வகுப்பு  பொதுத் தேர்வு, நீளநடுக்  கோடு ஆகிய குறுநாவல் களும், முட்டாள்களின் கீழ் உலகம், அழிபசி தீர்த்தல், சொல்லேர் ஆகிய கட்டு ரைத் தொகுப்புகளை வெளி யிட்டுள்ளார்.  கொங்கை உலகளாவிய குறுநாவல் போட்டியில் முதல் பரிசும், முத்தன் பள்  ளம் கணையாழி இதழ் நடத்  திய நாவல் போட்டியில் முதல் பரிசும், நீளநடுக்கோடு ஸீரோ டிகிரி நடத்திய குறுநாவல் போட்டியில் முதல் பரிசும் பெற்றன.  இவர் தமிழ்நாடு அரசின்  தமிழ் வளர்ச்சித் துறை விருது, என்சிபிஎச் மற்றும்  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருது, லண் டன் புதினம் விருது, இலங்கை கி.பி. அரவிந்தன் விருது, சௌமா விருது, நெருஞ்சி இலக்கிய விருது, நெய் வேலி பழுப்பு நிலக்கரி நிறு வனம் விருது உட்பட பல  விருதுகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.