districts

img

துரை.வைகோவுக்கு வாக்கு கேட்டு சிபிஎம், சிஐடியு இருசக்கர வாகனப் பிரச்சாரம்

புதுக்கோட்டை, ஏப்.16 - திருச்சி மக்களவைத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டி யிடும் மதிமுக வேட்பாளர் துரை.வைகோ வுக்கு வாக்கு கேட்டு புதுக்கோட்டை நகர் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சார்பில் செவ்வாய்க் கிழமை இருசக்கர வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது.

புதுக்கோட்டை பேருந்து நிலையத் தில் தொடங்கிய பிரச்சாரத்திற்கு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா ளர் ஆர்.சோலையப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், திமுக நகரச் செயலாளர் ஆ.செந்தில் ஆகியோர் கொடியசைத்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தனர். திமுக மாவட்ட துணைச் செயலாளர் க. மதியழகன், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் எம்.எம்.பாலு, தொமுச மாவட்டச் செயலாளர் ரெத்தினம் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர்.

சிஐடியு மாநிலச் செயலாளர் ஏ. ஸ்ரீதர், சிபிஎம் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலி ஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிர மணியன், விதொச மாவட்டச் செயலா ளர் டி.சலோமி, அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க மண்டல பொதுச் செய லாளர் ஆர்.மணிமாறன், தமுஎகச மாவட்டப் பொருளாளர் கி.ஜெயபாலன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.தேவமணி, சிஐடியு மற்றும் காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத் தினர் பங்கேற்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் நடைபெற்ற இப் பேரணி, புதுக்கோட்டை நகரத்தில் உள்ள 42 வார்டுகளிலும் நடைபெற்றது. முக்கிய இடங்களிலும் தேர்தல் பிரச் சார பரப்புரைகளும் நடைபெற்றன.