districts

img

கலைத் திருவிழா தொடக்கம்

புதுக்கோட்டை, டிச.8-  புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவினை சட்டத்  துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதனன்று தொடங்கி வைத்தார்.  இதனைத்தொடர்ந்து, ‘‘வானவில் மன்றம்’’ திட்டத்தின்கீழ், அறிவியல் தொழில்நுட்பம், மாணவர்களின் கேள்விக் கேட்கும் திறன் மற்றும் ஆராயும் திறனை மேம்படுத்தும் வகையில் 27 ஸ்டெம்  கருத்தாளர்களுக்கான அறிவியல் உப கரணங்களையும், கலைத்திருவிழா விற்காக ஜெ.ஜெ.கல்வி நிறுவனத்தின் சார்பில் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை யும் அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்னதுரை (கந்தர்வ கோட்டை), டாக்டர்.வை.முத்துராஜா (புதுக்கோட்டை) உள்ளிட்டோர் பங்கேற்ற னர். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் வியா ழனன்று நடைபெற்றது.  விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா  ராமு தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணி வண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.