districts

img

தடகளப் போட்டியில் வென்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

அறந்தாங்கி, அக்.23 -  புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் ஆவு டையார்கோவில் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் மும்முறை தாண்டுதலில் மிக  மூத்தோர் 19 பிரிவில் இரா.சக்திவேல் மற்றும் மூத்தோர் 17 பிரிவில் பா.தனுஷ்குமார் ஆகிய இருவரும் தங்கப் பதக்கம் வென்றனர். மேலும் நீளம் தாண்டுதலில் மூத்தோர் பிரிவில் பா.தனுஷ்குமார் மீண்டும் முதலிடம்  பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பள்ளிக்கு மாவட்ட அளவில் மூன்று தங்கங் கள் பெற்று தந்த மாணவர்களுக்கும், பயிற்சி  அளித்த உடற்கல்வி ஆசிரியர் பாக்கிய ராஜூக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமை ஆசிரி யர் ஸ்டாலின், ஆசிரியப் பெருமக்கள் மற்றும்  பள்ளி மேலாண்மை குழு தலைவி கவிதா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இவர்கள் இருவரும் நவம்பர் மாதம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

மணமேல்குடி
மாவட்ட அளவிலான தடகள  போட்டிகளில் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கலந்தர் அப்சர் என்ற மாணவரும், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கார்த்திகேயன் என்ற மாணவரும் நீளம் தாண்டுதலில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். மேலும்  மாநில அளவில் நடைபெற உள்ள போட்டி களில் பங்குபெற தகுதி பெற்றுள்ளனர். 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 400 மீ தொடர் ஓட்டப்பந்தயத்தில் 3 ஆம் இடமும், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 400 மீ  தொடர் ஓட்டப் பந்தயத்தில் 3 ஆம் இடமும்,  100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 12 ஆம் வகுப்பு  மாணவர் நவீன் மூன்றாம் இடமும் பிடித்து  மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளனர்.  போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற் கல்வி இயக்குநர் முனைவர் சுரேஷ்குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை தலைமை  ஆசிரியர் மா.ஜீவானந்தம் மற்றும் ஆசிரி யர்கள் பாராட்டினர்.