பேராவூரணி, டிச.27- தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், கடந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 11 மாதிரி பள்ளிகள் தொடங் கப்பட்டன. நடப்பாண்டில், 17 பள்ளிகள் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளில் சேர்வதற்கு நடப்பாண்டு பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் தேர்வு எழுதலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. இதில், பேரா வூரணி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்கள் தேர்வு எழுதினர். தற்போது பதினோ ராம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். தஞ்சையை அடுத்த வல்லத்தில் இந்த மாதிரி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்து வச திகளுடன் உயர்கல்விக்கான நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற் காக தகுதி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளிகளில், மாணவரின் தனித்திறமையை வளர்க்கும் வகையில் விளையாட்டு, தற்காப்பு கலை கள் பயிற்சி அளிக்கப்படுகின்றன. நலிவடைந்த கிரா மப்புற மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனங்க ளில் பணம் செலுத்தி படிக்க முடியாத நிலையை கருத்தில் கொண்டு, அரசே இவ்வகை மாதிரிப் பள்ளி களை தொடங்கியுள்ளது. பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பதினோராம் வகுப்பு மாணவர்கள் கு.துர்க்கைதாசன், மு.சபரிவாசன் ஆகியோர், தற்போது தஞ்சையில் உள்ள மாதிரிப் பள்ளிக்கு செல்ல உள்ளனர். அவர் களுக்குரிய சான்றிதழ்களை வழங்கி, அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முதல்வன் வாழ்த்து தெரிவித்தார்.