districts

img

தமுஎகச நடத்திய மகளிர் கவியரங்கம்

புதுக்கோட்டை, மார்ச் 24-  ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை நகரக்கிளை சார்பாக முழு வதும் பெண்கள் மட்டுமே கலந்துகொண்ட மகளிர் கவியரங்கம் வியாழக் கிழமை நடைபெற்றது. மு.கீதா தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் தலைமைப்பண்பு என்ற தலைப்பில் கா.மாலதி, இலக்கியம் என்ற தலைப் பில் மைதிலிகஸ்தூரி ரெங்கன், ஊடகம் என்ற தலைப்பில்; ரேவதி, சமு தாயம் என்ற தலைப்பில் கீதாஞ்சலிமஞ்சன், நகரம் என்ற தலைப்பில் டெய்சி ராணி,  தொழில்முனைவோர் என்ற தலைப்பில் நிலா பாரதி, சமூகசேவை என்ற தலைப்பில்  இந்துமதி,  குழந்தைகள் என்ற தலைப் பில் அமிர்தா, கல்வி என்ற தலைப்பில் கவின்பாரதி, கல்லூரி என்ற தலைப்பில் அட்சயா ஆகியோர் கவி தைகள் வாசித்தனர். தமுஎகச நகர் கிளைக் கூட்டத்திற்கு கிளைத் தலைவர் கி.ஜெயபாலன் தலைமை வகித்தார். மாநி லத்துணைத் தலைவர் நா.முத்துநிலவன், மாவட் டத்தலைவர் ராசி.பன்னீர்செல்வன், செயலா ளர் ஸ்டாலின் சரவணன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். முன்னதாக செயலாளர் பீர்முகமது வரவேற்க, ரகுமான் நன்றி கூறினார்.