districts

img

தொல்லியல்

பழனி, ஜன.23- திண்டுக்கல் மாவட்டம் பழனி  அருகே பாலசமுத்திரம் குரும்பபட்டி யில் ‘ஹோமோ எரக்டஸ்’ எனும் மனிதஇனம் உருவாக்கிய கல்லாங்குழிகள் அடங்கிய தொகுதி  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி மற்றும் பிரெஞ்சு மானுடவியல் அறிஞர் ரொமைன் சைமனல் இணைந்து  நிலவியல் ஆய் வாளர் மணிகண்டபாரத் உதவி யுடன் கல்லாங்குழிகளை கண்டு பிடித்துள்ளனர்.  

இதுகுறித்து அவர்கள் கூறுகை யில், ‘‘குரும்பபட்டி பவளக்கொடி அம்மன் கோவில் முன்புறம் வயலை ஒட்டிய பாறைப்பகுதியில் இந்தக் கல்லாங்குழிகள் செதுக்கப்பட்டுள் ளன. இந்தக் குழிகள் மனித இனத்து க்கு முந்தைய இனமான ‘ஹோமோ எரக்டஸ்’ இனம் உருவாக்கிய குழிகள் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  இங்கு மொத்தம் 191 குழிகள் உள் ளன. குழிகளை சிறியவை-இடைப் பட்டவை-பெரியவை-மிகப் பெரி யவை என நான்கு வகைகளாகப் பிரிக்க முடிகிறது.

மிகச் சிறிய குழிகள் 4 செ.மீ விட்டம் 1 செ.மீ ஆழம் முதல் மிகப்பெரிய குழிகள் 15 செ.மீ விட்டம் முதல் 13 செ.மீ ஆழம் வரை பல அளவுகளில் உள்ளன. குழிகளின் அமைப்பை மூன்று வகையாகப் பிரிக்க முடிகிறது. ஒரு பெரிய குழியைச் சுற்றி வட்டமாக பல குழிகளாகவும் பெரிய குழியின் தொடர்ச்சியாக நீளமான வரிசையில் பலகுழிகளும் பாறைச் சரிவில் ஒழுங்கற்ற தெளிப்பாக பல குழி களும் செதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்லாங்குழிகள் கீழ்த் தொல்பழங்கால கட்டத்தைச் சேர்ந்த வை.

இந்த கல்லாங்குழிகள் உலகின் மூன்றாவது தொன்மையான காலத்தைச் சேர்ந்தவை எனக் கணிக்க முடிகிறது.  ஏற்கனவே, இந்தியாவில் மத்தியப்பிரதேசத்தில் பீம்பேட்காவில் கண்டறியப்பட்ட கல்லாங்குழிகள் 7,00,000 வருடங்களும் தென்னாப் பிரிக்கா கலகாரி பாலைவனத்தில் கண்டறியப்பட்ட கல்லாங்குழிகள் 4,10,000 வருடங்களும் உள்ள நிலை யில் தற்போது பழனியில் கண்ட றியப்பட்ட கல்லாங்குழிகளின் தொன்மை அதிகபட்சமாக 4,00,000 ஆண்டுகள் வரை செல்லும் என்ப தால் இந்தக் கல்லாங்குழிகள் உல கின் மூன்றாவது தொன்மையான கல்லாங்குழிகள் என்ற பெருமை யைப் பெறுகின்றன.

தமிழகத்திலும் திண்டுக்கல், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்தக் கல்லாங்குழிகள் கண்டறி யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கண்ட றியப்பட்ட கல்லாங்குழிகள் பெரும்பா லும் தொல்பழங்கால புதைகுழி களுக்கு அருகில் உருவாக்கப்பட்டி ருப்பதால் இவை இறந்த முன்னோர் களின் நினைவாக உருவாக்கப் பட்டிருக்கலாம்.

பழனி கல்லாங்குழிகள் உரு வாக்கப்பட்ட பாறை ஆர்க்கியன்-புரட்டரோசோயிக் காலத்தை அதா வது 58 கோடி முதல் 250 கோடி ஆண்டு களுக்கு முன்னால் உருவாகிய பாறை களால் ஆனவை என்பதாலும் இந்த  உருமாறிய பாறைகளில் செதுக்கப் பட்ட கல்லாங்குழிகள் 2 முதல் 4 லட்சம் வருடங்கள் பழமையானவை என்பதா லும் மனிதகுலத்தின் பரிணாமம். இடப் பெயர்வு, தொன்மை பற்றிய ஆய்வு களுக்கும் குறிப்பாக தமிழினத்தின் தொன்மை பற்றிய ஆய்வுகளுக்கும் இந்தக் கல்லாங்குழிகளின் ஆய்வு பெரும்பங்கு வகிக்கும். இது பற்றிய ஆய்வும் தொடர்ந்து நடைபெற உள்ளது’’ என தெரிவித்தனர். (ந.நி.)