districts

img

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிர்ணயம்

நாமக்கல், ஜூன் 14-  விவசாய உற்பத்தி பொருட்க ளுக்கு குறைந்த பட்ச விலை நிர்ண யம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு விவ சாய சங்கத்தின் திருச்செங்கோடு ஒன்றிய மாநாட்டில் வலியுறுத்தப் பட்டுள்ளது.  நாமக்கல் மாவட்ட திருச்செங் கோடு ஒன்றிய 5 ஆவது மாநாடு மண்கரட்டுப்பாளையத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. சங் கத்தின் ஒன்றிய தலைவர் ஏ.ஆர். முத்துசாமி தலைமை தாங்கினார். மாநாட்டை துவக்கி வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட தலைவர் ஏ.ஆதிநாரா யணன் உரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கங்களின் செல்லமுத்து, விவசாய சங்கத்தின் மாவட்ட உதவி செயலாளர் ஆர். வேலாயுதம், சிபிஎம் திருச்செங் கோடு ஒன்றிய செயலாளர் ஆர். மனோகரன் ஆகியோர் உரையாற்றி னர்.  இதில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்து ரையின் அடிப்படையில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு குறைந் தபட்ச விலையாக உற்பத்தி செலவு கள் 50 சதம் சேர்த்து வழங்கிட வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிர்ணயம் செய்திட வேண்டும். மேட்டூர் அணையின் உபரி நீரை கால்வாய் அமைத்து திருச்செங்கோடு ஒன்றி யத்தில் அனைத்து ஏரி, குளங்களை யும் நிரப்பி நிலத்தடி நீரை அதிகப்ப டுத்திட வேண்டும். ஆவின் கொள் முதல் செய்யும் எருமைப் பால் லிட்டருக்கு 52 ரூபாயும், பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு 42 ரூபாயும் விலை நிர்ணயம் செய்திட வேண்டும். தமிழகம் முழுவதும் நாளொன் றுக்கு ஒரு கோடி லிட்டர் பால் ஆவின் மூலம் கொள்முதல் செய்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு
மாநாட்டில் ஒன்றிய தலைவ ராக ஏ.ஆர்.முத்துசாமி, செயலாள ராக மொளசி கே.பூபதி, பொரு ளாளராக பி.ஜீவானந்தம் உள்ளிட்ட 13 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது. முடிவில் டி. ஜீவானந்தம் நன்றி கூறினார்.