நாமக்கல், மார்ச். 1- வால்ராசம்பாளையம் விசைத்தறி தொழி லாளர் பிரச்சனை, சிஐடியுவின் தலையீட்டால் விசைத்தறி தொழிலாளர்களின் உடமைகள் ஒப்படைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள, வால்ராசம்பாளையம் பகுதி யில் உள்ள ஏரோ டெக்ஸ் விசைத்தறி கூடத் தின் உரிமையாளர்கள் தொழிலாளர் விரோத போக்குடன் நடந்து கொண்டனர். இதனைய டுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பள்ளிபாளை யம் காவேரி ஆர்.எஸ். சிஐடியு தொழிற் சங்க அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர்.
இத னையடுத்து சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி கள்,வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சி யர்,விசைத்தறி உரிமையாளர்கள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு பேச்சு வார்த்தையில் வால்ராசம்பாளையம் பகுதியில் பணியாற் றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு முறை யான கூலி ஒப்பந்தத்தை அமுல்படுத்துவது, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது, இடைக்கால நிவாரண நிதியாக பத்தாயிரம் ரூபாய் வழங்குவது என பல்வேறு ஒப்பந்தங்கள் அரசு அதிகாரிகள் முன்னிலையில் போடப் பட்டது. ஆனாலும் சொன்னபடி விசைத்தறி உரிமையாளர்கள் நடந்து கொள்ளவில்லை. மேலும், தொழிலாளர்களை மிரட்டும் போக்கு தொடர்ந்து வந்தது.
இதனையடுத்து, அச்சம டைந்த தொழிலாளர்கள் அங்கு பணியாற் றுவதற்கு விருப்பமில்லை எனவும், வால்ரா சம்பாளையம் பகுதியில் நாங்கள் வசித்து வரும் வீடு விசைத்தறி கூடத்தின் உரிமை யாளருக்கு சொந்தமானது என்பதால், எங்க ளுடைய வீட்டு பாத்திரங்கள், துணிமணிகள், குழந்தைகளின் பாட புத்தகங்கள் ஆகிய வற்றை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற னர். இதுகுறித்து, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தியிடம் கடந்த 9.2.2024 அன்று 8 குடும்பங்களை சேர்ந்த ஆண்,பெண், குழந்தைகள் என 27 பேர் மனு வழங்கினர். இந்நிலையில் இரண்டு வாரங்களைக் கடந்தும் அரசு அதிகாரி கள் அலட்சியத்தால் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால்,பாதிக் கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக வெள்ளியன்று பள்ளிபாளையம் வரு வாய் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட் டம் நடத்துவதற்கு சிஐடியு முன் தயாரிப்பு மேற்கொண்டது.
இந்நிலையில், குமாரபாளையம் வட்டாட் சியர் சண்முகவேல், பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சுகுமார், பள்ளிபாளையம் வரு வாய் ஆய்வாளர் ஜெகதீஷ் மற்றும் மோட மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சங்கர் மற்றும் போலீசார் முன்னிலையில் சம்பந் தப்பட்ட விசைத்தறி தொழிலாளர்களின் வீடு களில் உள்ள துணிமணிகள், பாத்திரங் கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட் டது. வால்ராசம்பாளையம் பகுதியில் இருந்து வெளியேறும் விசைத்தறி தொழிலா ளர்கள் திருப்பூர் ,பவானி, குமாரபாளையம், பள்ளிபாளையம், ஈரோடு உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் வசிப்பதற்காக தங்கள் உட மைகளை எடுத்துச் சென்றனர். விசைத்தறி உரிமையாளர்களின் அடாவடிப்போக்கினால் அச்சமடைந்த நிலை யில், சிஐடியுவின் உறுதியான தலையீட் டார், அரசு அதிகாரிகள் போலீசார் பாதுகாப் புடன் தங்கள் வீடுகளில் இருந்த உடைமை களை விசைத்தறி தொழிலாளர் எடுத்துச் சென்றனர்.