districts

img

மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி

பள்ளிபாளையம், ஜன.29- பள்ளிபாளையத்தில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி ஞாயிறன்று நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், தாஜ்நகர் பகுதி யில் அமைந்துள்ள, சேரன் பாலிடெக்னிக் கல்லூரியில், அலமேடு பாரத் நண்பர்கள் குழு மற்றும் நாமக்கல் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில், மாவட்ட அளவிலான சது ரங்கப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு நாமக்கல் மாவட்ட சதுரங்க கழக செயலாளர் எஸ்.ஞானசேகரன் தலைமை வகித்தார்.  அலமேடு பாரத் நண்பர்கள் குழு தலை வர் பி.பிரபு முன்னிலை வகித்தார். இப்போட்டியில் மாவட் டம் முழுவதும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு கள் வழங்கப்பட்டது. ஓடப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமலதா செந் தில்குமார், சேரன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ம.விஜய குமார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், அலமேடு பாரத் நண்பர்கள் குழுவினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.