districts

img

தென்னை மரங்களில் நோய் தாக்குதல் - பூச்சியியல் வல்லுநர்கள் ஆய்வு

நாமக்கல், அக்.12- திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில், தென்னை தோப்பில் விவசாய பூச்சியியல் வல்லுநர்கள் மற்றும் வேளாண்மை துறை அதி காரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.  திருச்செங்கோடு சுற்று வட்டார  பகுதிகளில் பல நூறு ஏக்கரில்  20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பயிரிடப்பட் டுள்ளது. தற்போது, கொல்லபட்டி பகுதியில் விவசாயி நடேசன் என்ப வரது தோட்டத்தில், தென்னை மரங் களில் புதுவகையான ஒரு நோய் தாக்கப்பட்டு குருத்துகள் அழுகி காய்ப்பு இல்லாமல் போவதோடு, புதிதாக நடவு செய்யப்பட்ட தென் னங்கன்றுகளில் இந்த நோய் தாக்கி  குருத்துகள் வளராமல் கன்று அழுகிப் போகிறது. இந்த நோய்  பரவி தென்னை விவசாயம் பாதிக் கப்படுமோ என அஞ்சிய விவசாயி நடேசன், வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத் தார். தகவலறிந்து திருச்செங் கோடு வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் லோகநாதன், திருச்செங்கோடு வேளாண்மை அலுவலர் பவித்ரா மற்றும் தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழக நோயியல் துறை இணை பேராசிரியர் மருதாசலம், சேலம்  சந்தியூர் வேளாண்மை அறிவியல்  நிலைய பூச்சியில் துறை இணைப் பேராசிரியர் ரவி ஆகியோர் கொண்ட குழுவினர் நடேசன் தோட்டத்தில் ஆய்வுப்பணி மேற் கொண்டனர். அப்போது தென்னை மரம் மற்றும் கன்றுகளில் பூஞ்சான் தாக்குதல் ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதனை குருத்து  நிறம் மாறும்போது கண்டறிய லாம். இந்த நோய் தண்ணீர் மற்றும்  காற்றில் பரவ கூடியது என தெரி வித்தனர்.  இது குறித்து செய்தியாளர் களிடம் பேசிய சேலம் வேளாண் மை அறிவியல் நிலைய பூச்சி யியல் துறை பேராசிரியர் முனைவர்  ரவி மற்றும் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக இணைப் பேராசிரியர் முனைவர் மருதாசலம் ஆகியோர் கூறிய தாவது, தென்னை கன்றுகள் நடும் போது காண்டாமிருக வண்டுகள் குறித்து சுமார் மூன்று வருடங்கள்  கவனமாக இருக்க வேண்டும்.

காண்டாமிருக வண்டுகள் தாக் காமல் இருக்க குறுமணல் வேப்பங் கொட்டை ஆகியவற்றை இணைத்து அரைத்து குருத்து களில் தூவ வேண்டும். அல்லது நாத்தாலியின் உருண்டைகளை குருத்துகளில் போட்டு வைத் தால் காண்டாமிருக வண்டிகள் தாக்காது. இந்த வண்டுகள் குப்பை  குழிகள், எரு குழிகள் கம்போஸ்ட் யார்டுகள் உள்ள பகுதிகளில் அதிகமாக உற்பத்தியாகும். இதனை தடுக்க மெட்ராரை சியம் அனி சோபில் பேட் என்ற பூஞ்சானத்தை ஊற்றினால் காண் டாமிருக வண்டு புழுக்கள் பருவத் திலேயே அழிக்கப்படும். இதனால்  வண்டுகளில் உற்பத்தி குறைந்து  விடும். அனைத்து விவசாயிகளும்  ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் காண்டாமிருக வண்டுகளின் உற்பத்தியை கட்டுப்படுத்த முடி யும். இந்த பூஞ்சான்கள் நெட்டை மர  தென்னைகளில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் அதிகமாக தாக்காது. ஆகவே மூன்று ஆண்டு கள் கன்று பருவத்தில் இதனை கண்காணிக்க வேண்டும். கன்று களை நடும்போது நீர் பாய்ச்சும் போது மண்கள் குருத்துகளில் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜூன், ஜூலை, அக் டோபர், நவம்பர் ஆகிய மழைக் காலங்களில் தான் இந்த பூஞ்சான் கள் பரவும். காப்பர் ஆக்சிட் மருந்து களை லிட்டருக்கு 3 கிராம் கலந்து தெளித்தால் இந்த பூஞ்சான்கள் வளராது என தெரிவித்தனர். தென்னை அதிகம் விளையக் கூடிய பொள்ளாச்சி பகுதிகளில் வேரழுகல் நோய் உள்ளது. இதனை கட்டுப்படுத்த பல நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருவ தாகவும் அதிகாரிகள் தெரிவித் தனர்.