districts

img

நாமக்கல் மாணவர் மதன்குமார் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

ந ாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம் பட்டி அருகே உள்ள புத்தூ ரைச் சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் ம.மதன் குமார் (28) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்லூரியின் விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு தடயவியல் மருத்துவம் படித்து வந்த நிலையில், ம.மதன்குமார் காணாமல் போய் பின்னர் அவரது உடல் எரிந்த நிலையில் சட லமாக அவர் தங்கியிருந்த ‘விடுதியின் பின்புறத்திலி ருந்து கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இந்த நிலையில், மதன் குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது உறவி னர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலை யும் தெரிவித்துள்ள முதல் வர், அவரின் குடும்பத்தா ருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலி ருந்து மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தர விட்டுள்ளார் மேலும், ம.மதன்குமார் இறந்தது குறித்து உரிய விசாரணை யை விரைந்து மேற் கொண்டு, அவரது இறப்பு க்கு நீதி கிடைக்கும் வகையில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் ஜார்க் கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை கேட்டுக் கொண்டுள்ளார்.