districts

img

இரட்டை ஒப்பந்த காலத்தை விழுங்கிய அரசு ரப்பர் கழகம் 3 அமைச்சர்கள் முன்பு இறுதி செய்யப்பட்டதை ஒப்பந்தமாக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் மறியல்

நாகர்கோவில், நவ.14- இரட்டை ஒப்பந்த காலத்தை விழுங்கிய அரசு ரப்பர் கழகம் 3 அமைச்சர்கள் முன்னிலையில் பேசி இறுதி செய்யப்பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட வலியுறுத்தி அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் திங்க ளன்று (நவ.14) சாலை மறியல் போராட்டம் நடத்தி கைதாகினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டார், கல்குளம், விள வங்கோடு வட்டங்களில் உல கத்தரம் வாய்ந்த இயற்கை ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 4 ஆயிரம் எக்டேருக்குமேல் தமிழக அரசுக்கு சொந்தமான அரசு ரப்பர் கழகத்தின் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. 3 ஆயி ரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர் கள் பணியாற்றி வந்தனர். தற்போது பல்வேறு காரணங்களால் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது. இவர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 2016 நவம்பர் 30 இல் காலாவதியானது. அதிமுக ஆட்சி காலத்தில் ஊதிய உயர்வு குறித்து நடந்த பேச்சுவார்த்தை களில் சுமுக முடிவு ஏற்படவில்லை.  ஆனாலும், 2017இல் நடந்த இடைக் கால ஒப்பந்தத்தின்படி தினக் கூலியாக ரூ.502 வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியிலும் தற்போ தைய திமுக ஆட்சியிலும் இது வரை 101 முறை ஊதிய பேச்சு வார்த்தை நடந்துள்ளதாக சிஐடியு தோட்டம் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் வல்சகுமார் தெரிவித்தார்.

ரப்பர் மரம் விற்பனையில் ஊழல்?

அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் இரட்டை ஒப்பந்த காலத்தை விழுங்கிய அதிகாரி களை கண்டித்தும் பேச்சுவார்த்தையில் தீர்வை எட்டிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் கையெழுத் திட வலியுறுத்தியும் திங்களன்று வடசேரியில் அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குநர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வ ருக்கு புகார் மனு ஒன்றை அனைத்து தொழிற் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினர் அனுப்பி யுள்ளனர். அதில், அரசு ரப்பர் கழகத்தின் முதிர்ந்த மரங்கள் ரப்பர் லேட்டக்ஸ் உற்பத்தி செய்ய லாம். அதன் பிறகு மரங்களை முறித்து அகற்ற  குறைவான விலைக்கு டெண்டர் விடப்பட்டதாக தெரிகிறது. அரசு ரப்பர் கழகத்துக்கும் அர சுக்கும் கிடைக்க வேண்டிய தொகை கிடைக்கா மல் ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகள் பணம் பெற்று வழங்க உள்ளதாக தெரிகிறது. வருவாய் இழப்பை ஏற்படுத்தும் டெண்டர் நடைமுறை களை ரத்து செய்து புதிய டெண்டர் அறிவிப்பு செய்து நீதிமன்ற நடுவர் மூலம் விற்பனை செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
பரபரப்பு ஏற்படுத்திய காணொலி                                                                                                                                                                                                                                                                                                                                  இதனிடையே ரூ.5 ஆயிரம் மதிப்பிலான ஒரு ரப்பர் மரத்தை ரூ.2,700 க்கு விற்கவும், அதற்கு கைமாறாக ரூ.1500 வழங்குமாறும் அதிகாரிகள் வியாபாரிகளுடன் பேரம் பேசுவது போன்ற காணொளி ஒன்று வெளியாகி பரப்பரப்பை ஏற் படுத்தி உள்ளது. லட்சக்கணக்கான முதிர்ந்த மரங்களை இவ்வாறு விற்பதன் மூலம் கோடிக் கணக்கில் சம்பாதிக்க அதிகாரிகள் திட்ட மிட்டதே தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணப் படாததற்கு காரணம் என தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆறு ஆண்டு கால மாக நீடிக்கும் ஊதிய உயர்வு பிரச்சனைக்கு இந்த ஆட்சியில் தீர்வு கிடைக்கும் என தொழி லாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு டன் காத்திருந்து ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். 3 அமைச்சர்கள் முன்னி லையில் அனைத்து தொழிற் சங்கங்களுடன் 31-12-2021 அன்று நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஒரு சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது.  அதில், 2019 டிசம்பர் முதல் தினசரி ஊதியத்தில் ரூ.40  உயர்வு அளிப்பது என முடிவானது. ஆனால், இதில் ஏற்றுக்கொண்ட ஊதிய உயர்வை ஒப்பந்தமாக மாற்ற அரசு ரப்பர் கழக அதிகாரி கள் விரும்பவில்லை. இதற்கு எதிராக காலவரையற்ற வேலை நிறுத்தம் நவம்பர் 7 முதல் நடத் தப்பட்டு வருகிறது. இதில் அனை த்து சங்கத்தினரும் பங்கேற்றுள்ள னர். அனைத்து அரசியல் கட்சியி னரும் தொழிலாளர் போராட்டத் துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அரசு ரப்பர் கழகத்தின் எதேச்சதிகாரப் போக் கைக் கண்டித்து திங்களன்று வட சேரியில் உள்ள நிர்வாக இயக்கு நர் அலுவலகம் முன்பு தொழிலா ளர்கள் மறியல் போராட்டம் நடத்தி னர். இதில் சிஐடியு மாவட்ட செய லாளர் கே.தங்கமோகன், வல்ச குமார், எஸ்.சி.ஸ்டாலின்தாஸ், தொமுச கூட்டமைப்பின் பி. விஜயன், பிஎம்எஸ் நிர்வாகி கே. ராஜேந்திரன், அண்ணா தொழிற் சங்க பேரவையின் ஆர்.சந்திர சேகர், ஐஎன்டியுசியின் எம்.ஜோசப் ஜெரால்டு ஆகியோர் உட்பட நூற் றுக்கணக்கான தொழிலாளர்கள் கொட்டும் மழையில் நனைந்தபடி பங்கேற்றனர். அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.