நாகர்கோவில், மே 7- சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் உட்பட குமரி மாவட்ட கடற்கரை சுற்று லா பகுதியில் காவலர்கள் தீவிர பாது காப்புப் பணியில் ஈடுபட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு காரணமாக ராட்சத அலைகள் எழும் என்பதால் கடற்கரை பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் கடற்கரை கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனி டையே கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி கன்னியாகுமரி, சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், கோவளம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் வழக்கத்துக்கு மாறாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் கடற்கரைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப் படவில்லை. வள்ளம் மற்றும் நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீன வர்கள் அனைவரும் வெள்ளிக்கிழ மை மாலையிலேயே கரைக்கு திரும்பி விட்டனர்.
இந்நிலையில் லெமூா் கடற்கரை யில் திங்களன்று கடலுக்குள் இறங்கிய பயிற்சி மருத்துவா்கள் 5 பேர் அலையில் சிக்கி உயிரிழந்த னர். அதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் பேரூ ராட்சி பணியாளர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தர வின்பேரில் காவலர்களும் கன்னியா குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டுள்ளனர். லெமூர் கடற்கரையின் நுழைவு வாயில் மூடப்பட்டு நுழைவு வாயிலில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயில் அருகே உள்ள பாதை வழியாக பொதுமக்கள் செல்லாத வகையில் சிவப்பு கலரில் கொடி கட்டப்பட்டு இருந்தது.
லெமூர் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகளை காவலர்கள் திருப்பி அனுப்பினார்கள். கடற்கரைக்குள் யாரையும் நுழைய அனுமதிக்கவில்லை. சொத்தவிளை கடற்கரை, முட்டம் கடற்கரை, கன்னி யாகுமரி கடற்கரை உட்பட சுற்றுலா பகுதிகளிலும் காவலர்கள் செவ்வாய்கிழமை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரை பகுதியில் சுற்றுலா பய ணிகள் யாரையும் நுழைய அனு மதிக்கவில்லை. கடலோர காவல் படை கடற்கரை பகுதிகளில் தீவிர மாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.