districts

img

குளச்சலில் விசைப்படகுகளில் சிக்கிய வாளை மீன்கள்

நாகர்கோவில், ஏப். 3 குளச்சல் கடல் பகுதி யில் சுமார் 300-க்கும் மேற் பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டு மரங்களும் மீன் பிடித் தொழில் செய்து வருகின் றன. விசைப்படகுகள் ஆழ் கடல் பகுதிவரை சென்று 10  நாட்கள் வரை தங்கி மீன்  பிடித்துவிட்டு கரை திரும்பும்.  ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். பைபர் வள்ளங் கள் காலையில் சென்று விட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.  தற்போது விசைப்படகு களில் கணவாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசனாகும். கடந்த வாரம் ஆழ்கடல் பகு திக்கு மீன்பிடிக்க சென்ற படகுகளில் 20 விசைப் படகுகள் திங்களன்று காலை கரை திரும்பின. இவற்றுள் சூரை, புல்லன், வாளை, ஆயில் சுறா, கேரை ஆகிய மீன்கள் கிடைத்தன. மீனவர்கள் இம்மீன்களை துறைமுக ஏலக்கூடத்தில் கரையேற்றி விற்பனை செய்தனர்.  புல்லன் தலா கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விலை போனது. கேரை மீன்கள் தலா ஒரு மீன்கள் 40 கிலோ முதல் 90 கிலோ வரை எடையிருந்தது. இது கிலோ தலா ரூ.230 வரை விலைபோனது. இது கடந்த வாரத்தை விடவும் ரூ.20 விலை குறைவு.  வாளை மீன்கள் தலா கிலோ ரூ.100 வரை விலை போனது. வாளை மீன்களு க்கு வெளியூர் மீன் சந்தை யில் நல்ல விலை உள்ள தால் வியாபாரிகள் போட்டிப் போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர். இந்த மீன்களை கருவாடு மற்றும் மீன் எண்ணைக்காவும் வியாபா ரிகள் வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.