districts

img

போதைப் பொருள் குற்றவாளிகள் 16 பேரை கட்சியில் சேர்த்த பாஜக!

நாகர்கோவில், மார்ச் 5 - போதைப் பொருள் வழக்கு களில் தொடர்புடைய 16 பேரை பாஜக தனது கட்சியில் சேர்த்துக் கொண்டிருப்பதாகவும், பாஜக ஆளும் குஜராத் தான் நாட்டி லேயே போதைப் பொருள் புழக்  கம் அதிகமுள்ள மாநிலம் என் றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:

“போதைப்பொருள் கடத்  தல், விற்பனையை தடுக்க முதல்வர் உத்தரவின் பேரில்  உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குஜராத்தில் தான் போதைப்பொருள் புழக்  கம் அதிகமாக உள்ளது என்பது தான் நாடறிந்த உண்மை. தமிழ்நாட்டில் அமைதியான ஆட்சி நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது, யாரும் குழப்பத்தை விளைவிக்க முடியாது. 

போதைப்பொருள் கடத்தல் காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்  டது பாஜகதான். குற்றப் பின் னணி உள்ளவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவ சியம் திமுகவிற்கு இல்லை. தேர்தலுக்காக தமிழ்நாடு அரசு  மீது பிரதமர் மோடி பழிபோடு வதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். போதையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடைய உறுதிபூண்டு செயல் பட்டு வருகிறோம். கஞ்சா பயிரி டப்படாத மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான்.

போதைப்பொருள் வழக்கு களில் 80 சதவிகிதத்திற்கும் மேல் தண்டனை பெற்றுத் தந்  துள்ளது தமிழ்நாடு அரசு. 2022-ஆம் ஆண்டு போதைப் பொருள் தொடர்பாக 2,414 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 1,916 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், போதைப் பொருள் வழக்குகளில் தொடர்பு டைய 16 பேரை கட்சியில் சேர்த் துக் கொண்டுள்ளது பாஜக. போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ள குஜராத்தில் முதலில் போதைப்பொருளை பாஜக தடுக்கட்டும். குட்கா வழக் கில் சிக்கிய விஜயபாஸ்கர், போதைப்பொருள் பற்றி பேசு வது விந்தையாக உள்ளது. ஆளுநர் அனுமதி அளித்ததை அடுத்து குட்கா வழக்கில் முன் னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.

கைதான 23 பேரில்  14 பேர் பாஜகவினர்!
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் பகுதிகளில் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பாஜகவைச் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.