districts

img

வயநாட்டுக்கு உதவ வாங்க… டீ சாப்பிடுங்க…

நாகர்கோவில், ஆக.17- வயநாடு நிலச்சரிவு கேரளத்தைப் போல் கன்னியாகுமரி மக்களிடமும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவுவதில் மக்க ளின் உணர்வை ஒரு முகப்படுத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குமரி மாவட்டக்குழு மேற்கொண்ட முயற் சிதான், டீயும் பலகாரமும் உண்டு, வய நாட்டுக்கு உதவுங்கள்’ என்கிற முழக்கம். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும், அமைச்சர் மனோ தங்கராஜும் தக்கலை பேருந்து நிலை யம் அருகில் அமைக்கப்பட்ட தேநீர்  கடைக்கு நேரடியாக வந்து வய நாட்டுக்கு உதவும் கரங்களுக்கு ஊக்க மளித்தனர்

நிலச்சரிவு நடந்த பகுதிகளில் நடந்த  துணிச்சல் மிக்க மீட்புப் பணிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஈடு பட்டது. நூற்றுக்கணக்கானோர் வீடு களை இழந்து தவிக்கும் நிலையில் அவர்களுக்கு 25 வீடுகளை கட்டித்தர  வாலிபர் சங்கத்தின் கேரள மாநிலக் குழு முடிவெடுத்துள்ளது. அதற்காக அவர்கள் கட்டுமானப்பணிகள், கல்,  மரங்கள் சுமப்பது, கழிவுப் பொருட்கள்,  பழைய செய்தித்தாள் சேகரிப்பது… என  பல்வேறு வகையில் பொருள் ஈட்டி வரு கிறார்கள். அதில் ஒன்றுதான் தேநீர்க் கடை உத்தியும்.

இதுகுறித்து கன்னியாகுமரி் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொருளாளர் விஷ்ணு கூறுகையில், வயநாட்டு மக்களுக்கு உதவ ஒருநாள் டீக்கடை நடத்த முடிவு  செய்து அணுகியபோது அதற்கான பால்  முதல் பலகாரங்கள் வரை குறைந்த விலையில் அல்லது நன்கொடையாக தந்து பலரும் உதவினார்கள். அதுவே எங்களுக்கு உற்சாகமூட்டியது. பல்வேறு தரப்பினரும் வந்து நாங்கள் வைத்திருந்த வயநாட்டுக்கான உண்டி யலில் பணம் போட்டார்கள். மேலும் ஓரிரு இடங்களில் தேநீர்க் கடை நடத்த  விருப்பம் தெரிவித்துள்ளனர். மொத்த மாக வசூலான ரூ.70 ஆயிரத்தை கேரளத்தில் ஒப்படைக்க உள்ளோம் என்றார்.

வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரெதீஷ் விற்பனையை துவக்கி  வைத்தார். செயலாளர் எட்வின் பிரைட்,  விஷ்ணு, ரமேஷ் குமார், முருகன், பகதீஷ், சாதிக் அலி, ஓவியர் லெனின் பாபு உள்ளிட்ட இளைஞர்கள் இரவு 8 மணிவரை கடை நடத்தினர். அமைச் சர் மனோ தங்கராஜின் மகன் ரிமோன்,  தொழில் அதிபர் குரியன் ஆபிரகா மின் பேரனும் கார்பஸ் கிறிஸ்டி பள்ளி  நிர்வாகியுமான ராய் மேத்யூ குரியன், பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் அருள் ஷோபன், வாலிபர் சங்க முன்னாள் தலைவர்கள் என்.எஸ். கண்ணன், என். முருகேசன், சிபிஎம்  மாவட்டச் செயலாளர் ஆர்.செல்ல சுவாமி, வட்டாரச் செயலாளர் சுஜா ஜாஸ்பின், ஆசிரியர் அரங்கசாமி உள்ளிட்டோர் உடனிருந்து உதவினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழியும் பால் வளத்துறை அமைச்சர்  மனோ தங்காராஜும் மழையை பொருட்படுத்தாமல் நேரில் வந்து  நிவாரண உதவி அளித்து வாலிபர் சங்க முயற்சிக்கு பாராட்டு தெரிவித் தனர். வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் விஷ்ணு, சுஜா ஜாஸ்பின்  ஆகியோர் நினைவுப் பரிசாக  புத்த கங்கள் வழங்கினர். இரத்த தானம் செய்து தொடர்ச்சியாக பலமுறை மாவட்ட ஆட்சியரின் விருது பெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்த மனிதநேயப்பணியிலும் தடம் பதித்துள்ளது.