நாகர்கோவில், மார்ச் 30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் குமரி மாவட்டம், குழித்துறையில் சனிக் கிழமையன்று நடைபெற்றது.
மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் விளக்கி பேசினார். மாவட்டச் செயலாளர் ஆர்.செல்ல சுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பி னர்கள், வட்டார செயலா ளர்கள், கட்சி உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.