districts

img

கல்வி உதவித்தொகையை பெற்றுத்தராமல் இந்து மாணவர்களை ஏமாற்றியவர்தான் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில்,மார்ச் 26- கல்வி உதவித்தொகை யை பெற்றுத்தராமல் இந்து  மாணவர்களை ஏமாற்றிய வர்தான் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் என்று  அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டினார். இந்தியா கூட்டணியின் கன்னியாகுமரி நாடாளு மன்ற தொகுதி காங்கிரஸ் வேட் பாளர் விஜய் வசந்த்தை ஆத ரித்து பிரச்சாரம் செய்யும் வகையில் ஞாயிற்றுக்கிழமை யன்று கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில்  இந்தியா கூட்டணி கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம்  நடை பெற்றது.

கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ், அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்றக்குழு தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் அமைச் சர் மனோ தங்கராஜ் பேசுகை யில், பாரதிய ஜனதா கட்சி ஊழ லுக்கு மேல் ஊழல் செய்துள் ளது. மக்கள் நலனை விட ஊழலில் அதிக அக்கறை காட்டுகிறார்கள்.  பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் இரண்டு முறை ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்தி ருக்கிறார்.

ஆட்சியில் இல்லாத போது  ஜூலை போராட்டம் நடத்தி இந்து மாணவர்களு க்கு கல்வி உதவித்தொ கையை வாங்கித் தருவோம் என்றார். பிறகு ஆட்சிக்கு வந்து வாக்குறுதியை நிறை வேற்றாமல் மாணவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தார். ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு கனிம வளம் கொண்டு செல்ல ஒன்றிய அரசின் சட்டம் உள்ளது. அப்படி உரிமை யில்லை என பொன் ராதா கிருஷ்ணன் நிரூபிக்கட்டும். நான் அரசியலை விட்டு விலகு கிறேன் என்று தெரிவித்தார்.