நாகர்கோவில், நவ.13- முந்தைய ஆட்சியில் நடந்த தவறை திருத்தும் வகையில் 2 ஊதிய உயர்வு ஒப்பந்தம் இல்லா மல் அவதிப்படும் அரசு ரப்பர் கழக தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு தமிழக முதல்வரை சிபிஎம் வலியுறுத்தி கேட்டுக் கொண் டுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த இயற்கை ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் இங்குள்ள அரசு ரப்பர் கழ கத்துக்கு பெரும் பங்கு உள்ளது. அரசு ரப்பர் கழக தொழிலாளர் களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந் தம் 2016 நவம்பர் 30 இல் காலா வதியானது. ஆனால் முந்தைய அதி முக அரசு, ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட உதவவில்லை. இந்த நிலையில், போராடி வந்த தொழிலாளர்கள் இதர பகுதி தொழிலாளர்களைப் போலவே ஆட்சி மாற்றம் ஏற்பட பாடுபட்டனர். ஆறு ஆண்டு காலமாக நீடிக் கும் ஊதிய உயர்வு பிரச்சனைக்கு இந்த ஆட்சியில் தீர்வு கிடைக்கும் என தொழிலாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் கள். 3 அமைச்சர்கள் அனைத்து தொழிற்சங்கங்களை அழைத்து அதிகாரிகள் முன்னிலையில் 31-12 -2021 அன்று முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், 2017 இல் நடந்த இடைக்கால ஒப்பந் தத்தின்படி வழங்கப்பட்டு வரும் தினக்கூலி ரூ.502 க்கு மேல் 2019 டிசம்பர் முதல் ரூ.40 ஊதிய உயர்வு அளிப்பது என முடிவாகி உள்ளது. தொழிலாளர்துறை அதிகாரி இது குறித்து கடிதமும் அளித்துள்ளார். ஆனால், ஏற்றுக்கொண்ட ஊதிய உயர்வை ஒப்பந்தமாக்கி உறுதி செய்வதை அரசு ரப்பர் கழக அதி காரிகள் தடுத்து வருவதாக தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டி யுள்ளன.
மூன்று அமைச்சர்கள் முன் னிலையில் இறுதிபடுத்தப்பட்ட முடிவுகளை ஒப்பந்தமாக்க மறுத்து வரும் அரசு ரப்பர் கழ கத்தின் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்தே, தொழிலாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் கள். ஏற்கனவே அரசு ரப்பர் கழ கத்துக்கு சொந்தமான 5 ஆயி ரம் எக்டேர் நிலத்தில் ஆயிரம் எக்டே ருக்கு மேற்பட்ட நிலத்தை பயன் படுத்தாமல் வனத்துறையிடம் ஒப்ப டைத்துள்ளனர். அதன் மூலம் நூற் றுக்கணக்கான வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஒட்டுமொத்தமாக ரப்பர் கழகத்தை ஒழிக்கும் சதித்திட்டத்துடன் அதி காரிகள் செயல்படுவதாக தொழி லாளர்கள் சந்தேகம் தெரிவித்துள் ளனர். பல்வேறு வழிகளில் அரசின் கவ னத்தை ஈர்த்த பின்னரும் தீர்வு காணப்படாத நிலையில் வேறு வழி யின்றி தொழிலாளர்கள் காலவரை யற்ற வேலை நிறுத்தத்தை நடத்தி வருகின்றனர். முந்தைய ஆட்சி யில் நடந்த தவறை திருத்தும் வகை யில் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி அரசு ரப்பர் கழக தொழி லாளர் பிரச்சனைக்கு தீர்வுகாண தமிழக முதல்வர் தலையிட்டு வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.