districts

img

உலக தண்ணீர் தின கிராம சபைக் கூட்டம்

நாகப்பட்டினம், மார்ச் 22-  நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருக்குவளை ஊராட்சியில் உலக் தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர்  வி.பி.நாகை மாலி கலந்து கொண்டார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மரு. அருண் தம்புராஜ், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், கீழையூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வராணி ஞானசேகரன், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) ஆ.சௌந்தரராஜன், கீழையூர் வட்டாட்சியர் ராஜ்குமார், திருக்குவளை ஊராட்சிமன்றத் தலைவர் எல்.பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
கும்பகோணம்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் நாச்சியார் கோவில் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி உமாசங்கர் தலைமை வகித்தார்.  கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய தலைவர் அனிதா, ஒன்றியச் செயலாளர் பார்த்திபன், சமூக ஆர்வலர் உமா சங்கர், திமுக ஊராட்சி செயலர் பூபதி, ஊராட்சி துணைத் தலைவர் பழனியம்மாள், ஊராட்சி செயலர் வரதராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்த பட்டியல் தேர்விற்கான பயனாளிகளை திருவிடைமருதூர் ஒன்றியத்திற்குட்பட்ட அலுவலகத்தில் தேர்வு செய்து இறுதிப்படுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும், திருவிடைமருதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீடு மனை பட்டா வேண்டி விண்ணப்பித்த அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
மயிலாடுதுறை 
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், ஆக்கூர்  ஊராட்சியில்  நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி  கலந்து கொண்டார்.  கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், இணை இயக்குநர் (வேளாண்மை) ஜெ.சேகர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, ஆக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.ஆர்.சந்திரமோகன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிங்காரவேலு ஆகியோர் கலந்துகொண்டனர்.