districts

img

மாணவர்களின் கலைத் திருவிழா: கீழ்வேளூர் எம்எல்ஏ நாகைமாலி பங்கேற்பு

நாகப்பட்டினம்,  டிச.18 - நாகப்பட்டினம் மாவட் டம் முழுவதும் அரசு பள்ளி  மாணவர்களுக்கான திறமை களை வெளிக்கொணரும் வகையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.  முதற்கட்டமாக பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை ஒன்றிய அளவிலும், ஒன்றிய அள வில் வெற்றி பெற்ற மாண வர்களை மாவட்ட அளவி லும், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர் களை மண்டல அளவிலும், போட்டியில் பங்கேற்க செய்து, அந்தந்த அளவில்  பரிசுகள் வழங்கி மாண வர்களை உற்சாகப்படுத்தி னர்.  மண்டல அளவில் வெற்றி  பெற்ற மாணவர்களை மாநில அளவிலான போட்டி யில் பங்கேற்க செய்து அவர் களுக்கு பரிசுகள் வழங்கி, வெளிநாடுகளுக்கு கல்வி  சுற்றுலா அழைத்து செல்வ தற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் மருத்து வர் அருண் தம்புராஜ், மீன்  வளர்ச்சி கழக தலைவர் என். கௌதமன், வேளாங் கண்ணி பேரூராட்சி துணைத்  தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோர் இப் போட்டிகளில் மாவட்ட அள வில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசுகள் வழங்கி  பாராட்டினர்.