நாகப்பட்டினம், ஜூன் 5 - தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலம் தழுவிய அளவில் ஏழு முனைகளில் இருந்து ‘அன்னமிட்ட கைகளை கிண்ணமேந்த விடுவதோ சமூகநீதி’ என்று தமிழக அரசிடம் நீதி கேட்கும் நடைப்பயண பிரச்சாரம் இயக்கம் ஞாயிற்றுக்கிழமை காலை நாகப்பட்டினம் வந்தடைந்தது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலை முதல் மாலை வரை மூன்று இடங்களில் நடைபெற்றது. நாகை-திருமருகல், வேதாரண்யம்-தலைஞாயிறு, கீழ்வேளூர்-கீழையூர் ஆகிய பகுதிகளின் முக்கிய வீதிகள் வழியாக நடைப்பயண பிரச்சார இயக்கம் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாகை, தலைஞாயிறு, கீழ்வேளூர் ஆகிய மூன்று வட்ட கிளைகளில் நடைபெற்ற நடைப்பயண பிரச்சார இயக்கத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தொழிற்சங்க தோழமைச் சங்கம், ஓய்வூதியர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நாகையில் நடைபெற்ற நடைப்பயண பிரச்சார இயக்கத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழகன். சத்துணவு சங்க மாவட்ட செயலாளர் கே.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.