districts

img

சமையல் எரிவாயு விலை உயர்வு: மாதர் சங்கம் நூதன ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், மார்ச் 27-  ஒன்றிய அரசு சமையல் எரிவாயு விலையை  ஏற்றியதையும், விலைவாசி உயர்வை கண்டித்தும் நாகப்பட்டினம் மாவட்டம் கீழை யூர் ஒன்றியம் கீழையூர் கடைத்தெருவில் மாதர் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  முன்னதாக சாலையில் விறகு அடுப்பு கொண்டு சமைத்தனர். சமையல் எரிவாயு விலை ஏற்றம் மற்றும் விலைவாசி உயர்வை  கண்டிக்கும் வகையில், சமையல் எரிவாயுக்கு  ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். ஒன்றிய அரசு மக்களை சுரண்டும் நடவடிக்கை களை ஒப்பாரி பாடல்கள் மூலம் வெளிப்படுத் தினர். மாதர் சங்க ஒன்றிய தலைவர் எஸ்.சுசிலா தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் டி.லதா கண்டன உரையாற் றினார். மாவட்ட பொருளாளர் கே.டி.எம்.சுஜாதா  மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;