districts

பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள்

வேதாரண்யம். ஏப்.2 - நாகப்பட்டினம் மாவட்டம்  வேதாரண்யம் தாலுகா தலை ஞாயிறு ஒன்றியம் உம்பளச் சேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பின ராக உள்ளனர்.  இந்தக் கூட்டுறவு வங்கி யில் கடந்த ஆண்டு இப்பகுதி யில் சாகுபடி செய்துள்ள 519 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். இவர்களில் 449 விவசாயிகள் வங்கி கடன் பெற்றவர்கள். 75 விவ சாயிகள் கடன் பெறாதவர் கள். இந்த வங்கியில் பயிர்  காப்பீடு செய்த 75 விவசாயி களுக்கு பயிர் காப்பீடு  தொகை வழங்கப்பட வில்லை. இதை  கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என விவசாயி கள் அறிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி பயிர் காப்பீட்டு தொ கையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப் பட்டது. ஆனால் பயிர் காப்பீட் டுத் தொகை வழங்கவில்லை.  பயிர் காப்பீட்டுத் தொகை  வழங்க கோரி வெள்ளிக் கிழமை உம்பளச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ரவி, துளாசபுரம்  ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாச்சலம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவ லறிந்த வாய்மேடு போலீஸ்  இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் சம்பவ  இடத்திற்கு வந்து விவசாயி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு வேளாண்மை அதி காரிகள் அங்கு வந்து விவ சாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இது  தொடர்பாக சனிக்கிழமை சமாதானக் கூட்டம் நடத்தப் படும் என தெரிவித்தனர். பின்னர் போராட்டத்தை கை விட்டு விவசாயிகள் அங்கி ருந்து கலைந்து சென்றனர்.

;