நாகப்பட்டினம், ஜன.10- நாகப்பட்டினம் மாவட்டம் கீழை யூர் ஒன்றியத்தில் உள்ள பிரதாப ராமபுரம் மேல்நிலைப் பள்ளியில் பாலர் சபையை மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ் துவக்கி வைத்தார். கீழ்வேளூர் வட்டம் பிரதாபரா புரம் ஊராட்சியில் தமிழ்நாடு குழந்தைகள் நல கொள்கை 2021-ன்படி ஊராட்சியில் உள்ள 18 வயதிற்கு கீழான பாலர்களை ஒருங்கிணைத்து பாலர் சபை உரு வாக்கப்பட்டது. இதில் 12 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் இணை யலாம். இச்சபையானது குழந்தை களை மேம்படுத்தும் வகையில், நல்லொழுக்கம், நற்பண்பு, மரி யாதை கொடுத்தல், வாசிப்பு உள்ளிட்ட கலந்துரையாடல் நிகழ்வை நடத்தும். இளம் பருவத்தினர் இடையே தவறான பழக்க வழக்கங்கள் ஏற்படா மல் இருக்க, தங்களுக்குள் சுய பரி சோதனை செய்து கொள்ளும் வகை யில் இக்கலந்துரையாடல் நிகழ்வு அமையும். புகையிலை, போதைப் பொருள், பான் மசாலா உள்ளிட்ட தீங்கு தரக்கூடிய பழக்க வழக் கங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்கும். பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.வி.எஸ்.சிவராசு, மக் கள் தொடர்பு அதிகாரி மீ.செல்வ குமார், பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.