districts

img

புனித வெள்ளியை முன்னிட்டு வேளாங்கண்ணியில் குவிந்த மக்கள்

நாகப்பட்டினம், ஏப்.7- நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில், இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினத்தையொட்டி சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  சிறப்பு திருப்பலியில் பங்கேற்க பாதயாத்திரையாகவும், வாகனம் மூலமும் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.  இதனால்  வேளாங்கண்ணி கடைவீதி, கடற்கரை உள்ளிட்ட இடங்கள் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் நிரம்பி உள்ளது. பக்தர்கள் குவிந்து உள்ளதை அடுத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.